எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி வேலுமணி புகார்கள் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய 26 இடங்களிலும், அவரது நண்பர் சந்திரசேகர் தொடர்புடைய 10 இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் 10, கோவையில் 9, திருச்சி, தாம்பரம்,ஆவடி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதாகவும் எஸ்.பி வேலுமணி மீது புகார் கூறியுள்ளனர். சி.விஜயபாஸ்கர் புகார்கள் தேசிய மருத்துவ குழு விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சி.விஜயபாஸ்கர் சான்று தந்தாக புகார் எழுந்துள்ளது. விஜயபாஸ்கர் மீதான புகாரில் ஆவணங்களை கைப்பற்ற 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போ...