ஐபிஎல் போட்டிகளை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி..! முக்கிய ஆலோசனையில் பிசிசிஐ…
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 26 ஆம் தேதி 25 ரசிகர்களின் முனைலயில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .
அந்த போட்டியில் கொல்கத்தா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூர் அணி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை காண 25 சதவீத ரசிகர்களுக்கு மட்டும் தற்போது பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது .
இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா அரசு ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஐபிஎல் போட்டியை நேரில் காண 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க சம்மதம் தெரிவித்தது . இருப்பினும் பிசிசிஐ தரப்பில் இதற்கு தற்போது அனுமதி தரப்படவில்லை.
மேலும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment