சார்ஜ் செய்தபடியே லேப்டாப் பயன்படுத்தும்போது தீப்பற்றும் அபாயம்... பாதுகாக்க 10 டிப்ஸ்!
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், மேகவரிப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுமலதா. பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரான இவர் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மூடப்பட்ட அறையில் படுக்கையில் அமர்ந்து சமீபத்தில் லேப்டாப்பை சார்ஜ் செய்துகொண்டே பணியாற்றத் தொடங்கியுள்ளார். அவர் அமர்ந்திருந்த கட்டிலின் மேல் நிறைய துணிகளும் கிடந்துள்ளன. சுமலதா பணியாற்றத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே லேப்டாப் சார்ஜர் அடாப்டரில் இருந்து தீப்பற்றியது. அந்தத் தீயானது படுக்கையில் கிடந்த துணிகள் மீது பரவி அதிலிருந்து அறை முழுவதும் பரவியது. அறையின் உள்ளிருந்தபடியே தீயை அணைக்க முயன்றார் சுமலதா. தீ வேகமாகப்... விரிவாக படிக்க >>