ஆளுநர் கான்வாய் மீது கற்கள் வீச்சு.. சட்டம் ஒழுங்கு சரியில்லை.. அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்
Chennai
oi-Vishnupriya R
சென்னை: மயிலாடுதுறையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வன்முறை போராட்டம் நடத்தியவர்கள் மீதும் அதை தடுக்காத அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்திற்கு இன்று ஆளுநர் ரவி சென்றிருந்தார். இங்கு நடந்த ஒரு விழாவுக்கு ஆளுநர் ரவியை அழைக்கக் கூடாது என திராவிடர் கழகம், திவிக, விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
Comments
Post a Comment