முதல்வருக்கு வந்த அலர்ட் ரிப்போர்ட்: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?


முதல்வருக்கு வந்த அலர்ட் ரிப்போர்ட்: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?


உளவுத்துறை முதல்வர் ஸ்டாலினுக்கு அளித்துள்ள அறிக்கையில் காவல்துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் குறித்து பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளனவாம்.

ஸ்டாலின் ஆட்சி சந்திக்கும் விமர்சனம்!

ஆட்சி மீது எந்த மாதிரியான விமர்சனங்கள் வந்துவிடக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்தாரோ அவையெல்லாம் அடுத்தடுத்து நடந்து அவரை சங்கடத்திற்குள் ஆழ்த்தியுள்ளது. முதலமைச்சராக பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையில் தனிப்பட்ட முறையில் முதல்வரின் செயல்பாடு அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் சில இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் ஆட்சி மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் கையில் உளவுத்துறை ரிப்போர்ட்!

இந்த சூழலில் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமை, ஆட்சி மீது மக்கள் கொண்டுள்ள எண்ணம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய ரிப்போர்ட் ஒன்றை உளவுத்துறை கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அதில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அனைத்துமே முதல்வரை அலர்ட் செய்யும் விதமாகவும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டிய விஷயங்களாகவும் உள்ளன.

சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு!

பாஜகவை பார்த்து பயப்படுகிறதா திமுக? கூட்டணிக்குள் மினி மநகூ!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சிறிய ஊர்கள் பெரிய நகரங்கள் வரை செயின் பறிப்பு சம்பவங்களும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. மிரட்டி பணம் பறிப்பதும் அதிகரித்துள்ளது. இந்த சம்பவங்கள் சிசிடிவி காட்சிகளாகவோ, மொபைல் கேமராக்களிலோ பதிவாகியோ ஆதாரமாக வந்தாலும் குற்றவாளிகளை பிடிப்பதில் காவல்துறையினர் வேகம் காட்டுவதில்லை. தொலைக்காட்சிகளில், சமூக வலைதளங்களில் ஒளிபரப்பாகி மக்களுக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துவதுடன், ஆட்சி மீதும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையைச் சேர்ந்த சில உயரதிகாரிகள் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் குற்றம் நடக்காமல் தடுக்க முடியும், குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க முடியும் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.

இது மட்டும் நல்லா தெரிஞ்சுருக்கு!

மக்களை நேரடியாக பாதிக்கும் மற்றொரு விஷயம் புதிதாக பதவிக்கு வந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நடத்தும் வசூல் வேட்டை தான். தேர்தலுக்கு செலவு செய்தது, சில ஆண்டுகளாக பதவியில் இல்லாதது, மேலிடத்துக்கு அனுப்ப வேண்டியது என உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சிலர் டார்கெட் நிர்ணயித்து வேட்டையில் ஈடுபடுவதால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். ஏற்கெனவே இந்த பதவிகளை அலங்கரித்தவர்கள் மட்டுமல்லாமல் புதிதாய் வந்தவர்களுக்கும் எந்தெந்த வகையில் கறக்கலாம் எனத் தெரிந்திருக்கிறது. ஆனால் அவர்கள் செய்ய வேண்டிய அன்றாட பணிகள் குறித்துதான் தெரியவில்லையாம்.

ஆட்சி மீது விழும் கரும்புள்ளி!

முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறையின் இந்த ரிப்போர்ட் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஏனெனில் இது நேரடியாக அவரை பாதிக்கும் வகையில் உள்ளது. காவல்துறையை முதல்வர் கையில் வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டால், காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டால் அது அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்.

ஸ்டாலின் சுழற்றும் சாட்டை!

அதிமுக ஒற்றை தலைமையா இவரை அறிவிங்க: ஓபிஎஸ் போட்ட குண்டு, அதிர்ந்து போன இபிஎஸ்

அதேபோல் கோட்டையில் இருந்துகொண்டு பல திட்டங்களை அறிவித்தாலும் குக்கிராமம் வரை செல்ல வேண்டுமானால் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சரியாக செயல்பட வேண்டும். இல்லையேல் ஸ்டாலின் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையாது. எனவே முதல்வர் இதிலும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. எனவே ஸ்டாலினின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் காவல்துறை, உள்ளாட்சிப் பிரதிநிதிகளை குறிவைத்து இருக்கும் என்கிறார்கள்.

Comments

Popular posts from this blog